சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   குலசேகராழ்வார்  
பெருமாள் திருமொழி  

Songs from 647.0 to 751.0   ( )
Pages:    Previous   1  2  3  4  5    6  Next
ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ



[725.0]
Back to Top
மலையதனால் அணை கட்டி மதில்-இலங்கை அழித்தவனே
அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே
கலை வலவர்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ



[726.0]
தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய்
வளைய ஒரு சிலையதனால் மதில்-இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கருமணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ



[727.0]
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே
ஏ வரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ



[728.0]
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் காகுத்தன்
தன் அடிமேல் தாலேலோ என்று உரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே



[729.0]
வன் தாளின் இணை வணங்கி வளநகரம்
      தொழுது ஏத்த மன்னன் ஆவான்
நின்றாயை அரியணை மேல் இருந்தாயை
      நெடுங் கானம் படரப் போகு
என்றாள் எம் இராமாவோ உனைப் பயந்த
      கைகேசி தன் சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
      நன்மகனே உன்னை நானே



[730.0]
Back to Top
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை
      வேண்டாதே, விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
      மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல் நெடுங்கண் நேரிழையும்
      இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ
      எம்பெருமான் என் செய்கேனே



[731.0]
கொல் அணை வேல் வரி நெடுங் கண் கௌசலைதன்
      குல மதலாய் குனி வில் ஏந்தும்
மல் அணைந்த வரைத் தோளா வல் வினையேன்
      மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய்
      வியன் கான மரத்தின் நீழற்
கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ?
      காகுத்தா கரிய கோவே             



[732.0]
வா போகு வா இன்னம் வந்து ஒருகாற்
      கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலும் எழில்-தோளி தன்பொருட்டா
      விடையோன்தன் வில்லைச் செற்றாய்
மா போகு நெடுங் கானம் வல்வினையேன்
      மனம் உருக்கும் மகனே இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
      போகாதே நிற்குமாறே



[733.0]
பொருந்தார் கை வேல்-நுதிபோல் பரல் பாய
      மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
      வெம் பசிநோய் கூர இன்று
பெரும்பாவியேன் மகனே போகின்றாய்
      கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற் கேட்ட அருவினையேன்
      என் செய்கேன் அந்தோ யானே



[734.0]
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வச்சொல்
      கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே
      முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
      கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
      இழிதகையேன் இருக்கின்றேனே



[735.0]
Back to Top
பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப்
      புனைந்து பூந் துகில் சேர் அல்குற்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
      அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
      செலத்தக்க வனம் தான் சேர்தல்
தூ மறையீர் இது தகவோ? சுமந்திரனே
      வசிட்டனே சொல்லீர் நீரே



[736.0]
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும்
      தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என்
      மருகியையும் வனத்திற் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
      என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி இரு நிலத்தில்
      இனிதாக இருக்கின்றாயே



[737.0]
முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி
      அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின்
      வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக்
      கொண்டு வனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்
      ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே!



[738.0]
தேன் நகு மா மலர்க் கூந்தற் கௌசலையும்
      சுமித்திரையும் சிந்தை நோவ
கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
      கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
       வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
      மனு-குலத்தார் தங்கள் கோவே



[739.0]
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்
      வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்
தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான்
      புலம்பிய அப் புலம்பல்தன்னை
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்கோன்
      குடைக் குல சேகரன் சொற் செய்த
சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்
      தீ நெறிக்கண் செல்லார் தாமே



[740.0]
Back to Top
அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
      அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
      விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
      என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே



[741.0]
வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
      வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
      வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
      அணிமணி-ஆசனத்து இருந்த அம்மான் தானே



[742.0]
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்
      சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி
வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு
      வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை
      இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே.



[743.0]
தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்
      தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு
      பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
      இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே



[744.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song